Friday 14 August 2015

என்னமோ தெரியலை ஒரு தெம்பு வருது

ஏன் ரஜினி படப் பெயரை உங்கள் படத்தின் பெயராக வைத்திருக்கிறீர்கள் என்று யாரிடம் கேட்டாலும், மேலே உள்ளது போல்தான் பதிலளிக்கிறார்கள். சுசீந்திரன் விஷாலை வைத்து இயக்கியிருக்கும் படம், பாயும் புலி. ஏன் இந்த பெயர்?
 
 
அந்த பெயரை வச்சாலே பாதி விளம்பரம் கிடைச்சிடுது என்றார் சுசீந்திரன். தவிர, படத்திலும் விஷால், முதலில் பதுங்கி பிறகு பாய்வாராம், புலி மாதிரி. அதனால் இந்த பெயர் ஆப்டாக இருக்கும் என்று தேர்வு செய்தோம் என்றார். 
 
பாபி சிம்ஹாவின் படத்தின் பெயர், வீரா. ஏன் வீரா? ஹீரோ ரொம்ப வீரமானவர். சண்டையெல்லாம் போடுவார் என்று எகனை மொகனையாக ஏதாவது சொல்வார்கள். அதனால் கேட்கவே இல்லை. இதேபோல் ஜானி, பாட்ஷா, அண்ணாமலை என்று ரஜினியின் படப்பெயர்களை தங்கள் படங்களுக்கு வைக்க ஒரு கூட்டம் அலைகிறது. 
 
கதையை நம்பினால் எதுக்கு பெயருக்கு பின்னால் ஓடணும்?

சிம்புவின் ஆன்மீக கதை

நயன்தாரா, ஹன்சிகா என்று காதல் தேடி ஓடிய சிம்பு திடீரென்று ஒரு சுப்ரபாதத்தில் காவி உடுத்தி இமயமலைக்கு பயணமானது டோட்டல் தமிழ் நாட்டையும் அப்செட்டாக்கியது. அப்படியே சாமியராகி ரஜினீஸ் மாதிரி வருவாரோ என்று ஒருசிலருக்கு பயம். ஆனால், அப்படி எந்த பயங்கரவாதமும் செய்யவில்லை சிம்பு. போன வேகத்தில் திரும்பி வந்தார். கிளைமேட் ஒத்துக்கலை போல.
 
 
ரொம்ப தாமதமாக இப்போது, நான் ஏன் சாமியாரானேன் என பேட்டி தந்துள்ளார்.
 
சிம்பு சின்ன வயதிலேயே வேலை செய்ய ஆரம்பித்துவிட்டார் அல்லவா. எதுக்கு இப்படி சின்ன வயசிலயிருந்தே உழைச்சுகிட்டும் ஓடிகிட்டும் ஒருக்கணும் என்று ஒருநாள் சிம்புக்கு தோணியிருக்கு. உடனே ஆன்மீகத்தில் குதித்து இமயமலையில் மேலெழுந்திருக்கிறார்.
 
சரி, அங்கயே அப்படியே செட்டிலாகலாம்னுதான் இருந்தேன். ஆனா, சிம்பு பயந்துட்டான்னு சொல்வாங்கயில்லையா, அதனாலதான் ரிட்டர்ன் டிக்கெட் போட்டேன் என்றிருக்கிறார்.
 
அடுத்தவன் என்ன சொல்வான்னு யோசிக்காம, நமக்கு நல்லதுன்னு தோணுறதை செய்யணுங்கிறதுதான் ஆன்மீகத்தோட பாலபாடம். லௌகீகத்தின் அத்தனை சுகங்களையும் அனுபவிச்சுகிட்டு ஆன்மீக கொட்டாவிவிடுறதில் நடிகர்களை அடிச்சுக்க முடியாது. 
 
நீங்க பேசுங்கண்ணா.

Sunday 9 August 2015

பிரபல நடிகை அசின் இவரை தான் திருமணம் செய்து கொள்ள போகிறாராம்!

தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் அசின். இதன் பின் பாலிவுட்டிலும் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்று அமீர் கானுக்கு ஜோடியாக கஜினி படத்தில் நடித்தார்.



படம் ஹிட் ஆனாலும் அவருக்கு பெரிய பெயர் ஒன்றும் கிடைக்கவில்லை, இந்நிலையில் இவர் பிரபல தொழிலதிபர் ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது.

இவர் நடிப்பில் விரைவில் ஆல் இஸ் வெல் படம் திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தில் அபிஷேக் பச்சனுக்கு ஜோடியாக இவர் நடித்துள்ளார்.

சமந்தாவுக்கு வந்த டிமாண்டை பாருங்கள்

தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் சமந்தாவுக்கு இருக்கும் டிமாண்ட் மிரள வைக்கிறது.



மாஸ்கோவின் காவிரி, பாணா காத்தாடி, விண்ணைத்தாண்டி வருவாயா படங்களில் நடித்தபோது சமந்தா சாதாரணமாகத்தான் இருந்தார். அதற்குப் பிறகு வந்ததுதான் இந்த அசுர வளர்ச்சி.
 
விஜய், விக்ரம், சூர்யா, உதயநிதி அனைவருடனும் இப்போது தமிழில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல் தெலுங்கில்.
 
தெலுங்கின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான த்ரிவிக்ரம் அடுத்து ரொமான்டிக் படமொன்றை இயக்குகிறார். கதை முடிவானதும், அவர் கால்ஷீட் வாங்கியது சமந்தாவிடம். சரி, நாயகன்?
 
நாயகன் யார் என்பதை முடிவு செய்யும் முன்பே சமந்தாவிடம் கால்ஷீட் வாங்கிவிட்டார் த்ரிவிக்ரம். அதன் பிறகு, சமந்தாவுக்கு யார் சரிவருவார்கள் எனப் பார்த்து நித்தினை நாயகனாக்கியிருக்கிறார். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
 
த்ரிவிக்ரமின் முந்தைய இரு படங்களிலும் சமந்தாவே நாயகி என்பது முக்கியமான தகவல்.

Sunday 2 August 2015

பாகுபலியை தூக்கி சாப்பிட தூபம்போடும் டைரக்டர்.. தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்

பாகுபலி திரைப்படத்தின் பிரமாண்டத்தை பார்த்து பயந்து போன நம்மூர் பிரமாண்ட டைரக்டர் உச்ச நட்சத்திரத்துடனான தனது அடுத்த படத்தை வெகு பிரமாண்டமாக எடுக்க முடிவு செய்து பெரிய குழுவோடு களமிறங்கியுள்ளார். ஆனால், இருவரையும் நம்புவதற்கு தயாரிப்பு தரப்புகள் தயாராக இல்லையாம். பாகுபலி திரைப்படம் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட விதத்தால் உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 



வசூலை வாரி குவித்து வருகிறது. இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர், ராஜமவுலிதான் என்று அனைத்து ஊடகங்களும் ரத்தின கம்பளம் விரித்துள்ளன. இது நம்மூரிலுள்ள பிரமாண்ட இயக்குநருக்கு கடும் கடுப்புகளை கிளப்பிவிட்டுள்ளது. ராஜமவுலியை அந்த பிரமாண்டம் வெளிப்படையாக வாழ்த்தி தனது பெரியமனுஷத் தனத்தை காண்பிப்பது போல காண்பித்துக் கொண்டாலும், உள்ளுக்குள் வெந்து கொண்டுள்ளது மனது. உச்ச நட்சத்திரத்தை வைத்து தனது முந்தைய படத்தின் 2வது பாகம் எடுக்க உள்ள அந்த பிரமாண்டம், 27 உதவி இயக்குநர்களையும், 10 நிர்வாக தயாரிப்பாளர்களையும் வைத்து டிஸ்கஷன் செய்துள்ளார். 

எப்படியாவது, பாகுபலியை முந்திவிட வேண்டும், தயாரிப்பாளருக்கு எத்தனை மொட்டை போட்டாலும் பரவாயில்லை என்ற ரீதியில் ரொம்ப உக்கிரமாக டிஸ்கஷன் நடந்துள்ளது. இந்நிலையில்தான், டிஸ்கஷன் விஷயத்தை யாரோ வெளியே லீக் செய்துவிட்டனர். கடுப்பிலுள்ளாராம், பிரமாண்டம். பிரமாண்டம், தயாரிப்பாளரை தெருவில் நிறுத்தி எடுத்த முந்தைய பிரமாண்ட படத்துக்கு போட்ட முதலை எடுப்பதற்குள் தயாரிப்பாளருக்கு நுரை தள்ளிவிட்டது. இதில், பாகுபாலியை முந்துகிறேன் பேர்வழி என்ற பெயரில், 300 கோடி என்று பட்ஜெட்டை போட்டு வைத்திருக்கும் பிரமாண்டத்தை நம்பினால் தெருக்கோடிதான் கதியா என்று பல தயாரிப்பாளர்களும் புழுதி பறக்க ஓடிக் கொண்டுள்ளனர்.

பிரமாண்டம் ஹீரோவாக வைத்து படமெடுக்க உள்ள நடிகருக்கும் இப்போது போதாத காலம். மக்கள் ரசனை மாறிவிட்டதால் அந்த குதிரை மீதும் பந்தையம் கட்ட தயாரிப்பாளர்கள் தயங்குகின்றனர். பிரமாண்டத்தின் சமீபத்திய படங்களும் பல லாஜிக் ஓட்டைகளுடன், புளித்து போன காட்சிகளுடன் பல்லிளிக்கின்றன. இருந்தாலும் ராஜமவுலியா, நானா என்ற கேள்விமட்டும் பிரமாண்டத்தை தூங்கவிடாமல் செய்து வருகிறதாம்.

தமிழ் சினிமாவின் ரியல் நண்பர்கள்- ஸ்பெஷல்

தமிழ் சினிமாவில் எப்போதும் இரண்டு நாயகர்களுக்கு இடையே ஒரு வகை போட்டி இருக்கும், இவை இவருக்கு ஒரு கூட்டம், அவருக்கு ஒரு கூட்டம் என பெரிய குழுக்களாக இருக்கும்.
தியேட்டர் சண்டை, போஸ்டர் சண்டை, பேனர் சண்டை என தற்போது வலைத்தள சண்டை வரை வளர்ந்துள்ளது இந்த கலாச்சாரம். ஆனால், உண்மையாகவே அவர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல நண்பர்களாகவே இருப்பார்கள், ஒரு சிலரின் தவறான தூண்டுதலால் ரசிகர்களுக்கு இடையே சண்டை வருகின்றது.
எம்.ஜி.ஆர்-சிவாஜி


பாகவதர் மட்டும் தமிழ் சினிமாவை ஆண்டு வந்த நிலையில், எம்.ஜி.ஆர்-சிவாஜி என இரண்டு நட்சத்திரங்கள் சினிமாவில் ஜொலிக்க ஆரம்பித்தனர். முதன் முறையாக இரண்டு நடிகர்கள் மோதல் இங்கு தான் தொடங்கியது. ஆனால், அவர்கள் ஒருவருக்கொருவர் எப்போதும் நல்ல நட்புடன் தான் கடைசி வரை இருந்தனர். இதன் காரணமாகவே ரசிகர்கள் சண்டை தீவிரமடையவில்லை.
ரஜினி-கமல்


ரசிகர்களின் மோதல் அதிகமானது இந்த கால கட்டத்தில் தான், இருவரும் சேர்ந்து பல படங்கள் நடித்தாலும், இவர்கள் பிரிந்து நடிக்க தொடங்கியவுடன் ரசிகர்களும் பிரிய ஆரம்பித்து விட்டனர். ஆனால், பல மேடைகளில் ரஜினி, கமலையும், கமல் ரஜினியையும் புகழ்ந்து பேச ரசிகர்களுக்குள்ளான சண்டை குறைந்தது. மேலும், கமல் ஒரு விழாவில் ரஜினி-கமல் போல் சிறந்த நண்பர்கள் வேறு யாரும் இல்லை என கூறியது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது.
விஜய்-அஜித்


நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை, உச்சக்கட்ட போர் என்றால் அது விஜய்-அஜித் ரசிகர்களின் சண்டை தான். அஜித்த்து, விஜய்யும் தான் தற்போது தமிழ் சினிமாவில் யாராலும் அசைக்க முடியாத நடிகர்கள், ஏனெனில் அத்தனை பெரிய ரசிகர்கள் வட்டத்தை அவர்கள் வைத்துள்ளனர். மற்ற நடிகர்களை திட்டுபவர் என் ரசிகர்களாக இருக்க தகுதியில்லை என அஜித் கூறினார், மற்ற நடிகர்களையும் நீங்கள் மதிக்க வேண்டும் என விஜய் கூறினார்.
ஆனால், இவர்கள் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அப்படியில்லை என்பது தான் வருத்தம். அவர்கள் நட்புடன் இருந்தாலும், ஒரு சிலரின் தவறான செயல்களால் பெரிய போர் வெடித்து விடுகிறது. இனியாவது இவர்கள் தங்கள் நடிகர்களின் வார்த்தைகளுக்கு மரியாதை செலுத்த வேண்டும்.
சிம்பு-தனுஷ்


அடுத்த தலைமுறை ரசிகர்களுக்கான போட்டி நடிகர்கள் இவர்கள், ஆனால், பிரச்சனையை ஆரம்பத்திலேயே தங்கள் நட்பால் கிள்ளி எறிந்து விட்டனர். எனவே இவர்கள் நட்பை புரிந்த ரசிகர்கள் யாரும் சண்டையிட்டு கொள்வதில்லை. இருவரின் வாக்கியமும் எப்போதும் ஒன்று தான் Spread Love.

இதுபோல் அனைத்து நடிகர்களுமே நட்புடன் இருக்க, நாம் மட்டும் ஏன் சண்டையிட்டு கொள்ள வேண்டும்....நண்பர்கள் அனைவருக்கும் #HappyFriendshipDay